10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை:

வங்கக்கடலின் தென்மேற்கு திசையில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும். வங்களா வளைகுடா மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உள்ளது, இன்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழக்கும். பின், அந்த காற்றழுத்த தாழ்வு நிலை கேரளாவை நோக்கி நகரும்.

இன்றைக்கு தங்க நகை வாங்கலாமா?? வேணாமா??

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது வரை 20 இடங்களில் மிக அதிக கனமழையும், 50 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பை விட 2 சதவீதம் குறைவாக தான் பெய்ந்துள்ளது. நேற்று வரை 16 சதவீதமாக பெய்து வந்த மழை இன்று 14 சதவிதஹ் வரை அதிகரித்து கொட்டி தீர்த்துள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here