தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூடுதலாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை:
கடந்த சில தினங்களாக வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை அடுத்த சில நாட்களுக்கு பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
மழை பதிவு மற்றும் வெப்பநிலை:
தமிழகத்தில் வெப்பநிலை அடுத்த 24 நேரத்திற்கு அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
தமிழகத்தில் அதிகபட்சமாக கனமழை நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது, திருவள்ளூர் மாவட்டத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக வால்பாறை பகுதியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.