சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழ் நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, கள்ளக்குறிச்சி, தென்காசி, திண்டுக்கல், சேலம், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கக் கடலின் வடபகுதியில் ஒடிசா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவிழந்து ஒடிசா பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்