தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 25 ஆம் தேதி வரை கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நாளை விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதே போல நாளை மறுநாள் அதாவது செப் 24 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப் 25 ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், புதுவை ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்