வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் புதுக்கோட்டை, மதுரை, காரைக்காலிலும், பிற டெல்டா மாவட்டங்களிலும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதுவும் அதற்கு முன்னர் சுட்டெரித்த வெயிலால் வாடிய மக்களுக்கு பெய்த கனமழை சற்று குளிர்ச்சியை தந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வெள்ள பேருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தற்போதைய தகவல்களின் படி, நாளை (18 செப் 2021) தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழையும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
அதே போல் நாளை மறுநாள் (19 செப் 2021) தேதி வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமுதல் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்