தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல நகரங்களில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (செப்டம்பர் 05) நீலகிரி, கோயம்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது இதை தவிர டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (செப்டம்பர் 06) நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், மேலும் கடலோர மாவட்டங்ககளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்