தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை:
கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பரவலாக எல்லா இடங்களிலும் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கல் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று பலமாக வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:
தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘சைவ நெத்திலி குழம்பு’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!
கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் உள்ள கடம்பூர் பகுதியில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது, விழுப்புரம் மாவட்டத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது, சிவகங்கை, கோவை போன்ற பகுதிகளில் குறைந்தபட்சமாக 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.