Friday, April 19, 2024

வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

Must Read

தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு அருகில் உள்ள கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை 3 மாவட்டங்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் சாகர் தீவு மற்றும் சுந்தர் பான் காடுகளை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை:

வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வடமாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மழைப்பதிவு:

தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் பகுதியில் 17 செ.மீ, தாமரைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் 11 செ.மீ, திருத்தணி, மதுராந்தகம், திருவள்ளூர், சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் வேம்பாக்கம், குமிடிபட்டி போன்ற பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திருவாலங்காடு, சோழிங்கநல்லூர், அரக்கோணம், ரெட் ஹில்ஸ் பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக சென்னை விமான நிலையம், கேளம்பாக்கம் பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் சாகர் தீவு மற்றும் சுந்தர் பான் காடுகளை கடக்கும். இதன் காரணமாக, அக்டோபர் 23 ஆம் தேதி வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -