அலெர்ட்டா இருங்க மக்களே.. ஆகஸ்ட் 6 வரை இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை!!

0

இந்தியா முழுவதும் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

  

தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக வட மாநிலங்கள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் சூழலே நீடிக்கிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு அளித்துள்ள தகவலின் அடிப்படையில் நாளை நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதே சமயம் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை நீலகிரி,கோயம்புத்தூர் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here