T20 உலக கோப்பை.., தோனி செஞ்சதை நீங்க எப்போ செய்வீங்க?? ரோஹித் ஷர்மாவுக்கு கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர்!!

0

T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் வீரரான வசீம் ஜாபர் கேப்டன் ரோகித் சர்மாவிடம், கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வசீம் ஜாபர் கோரிக்கை!!

T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவித்ததில் இருந்து முன்னாள் வீரர்கள் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வசீம் ஜாபரும், கேப்டன் ரோகித் சர்மாவிடம் தோனி செய்ததை நீங்கள் எப்போது செய்வீங்க என கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தோனி கேப்டனாக இருந்த போது, தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்தார். அதன் பிறகு அவரது ஆட்டத்தை கவனித்த தோனி தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார்.

அன்றைக்கு கிடைத்த வாய்ப்பை ரோகித் சர்மா தற்போது வரை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். இதே போன்று ஒரு வாய்ப்பை ரோஹித் சர்மா ரிஷப் பந்துக்கு கொடுக்க வேண்டும் என ஜாபர் கோரிக்கை வைத்துள்ளார். தற்போதைய இந்திய அணியில் தொடக்க வீரராக ரோகித் சர்மாவும், கே எல் ராகுலும் விளையாடி வருகின்றனர். ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த்தை களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரர் வசீம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரிஷப் பந்த் ஓப்பனிங் வீரராக களமிறங்கும் போது இந்தியாவுக்கு நல்ல தொடக்கமாக அமையும். இதனால் ரிஷப் பந்துக்கு தனது இடத்தை கொடுத்து ரோகித் சர்மா வாய்ப்பளிக்க வேண்டும். இப்படி செய்தால் இந்திய பேட்டிங் வரிசையில் அதிக மாற்றம் ஏற்படும். அதன்படி பேட்டிங் வரிசையில் தொடக்க வீரராக ரிஷப் பந்த், கே எல் ராகுலும், மூன்றாம் இடத்தில் விராட் கோலியும், 4 ஆம் இடத்தில் ரோகித் சர்மாவும், ஐந்தாவதாக சூரியகுமார் யாதவ் களமிறங்கினால் இந்திய அணிக்கு சாதகமான சூழல் அமையும் என வசியம் ஜபார் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here