விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி 3 இன் பைனல் எபிசோடில் தொகுப்பாளர் விஜே ரக்ஷன், பாதியிலே வெளியேறியதன் காரணத்தை, தற்போது தெரிவித்துள்ளார்.
ரக்ஷன் விளக்கம்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 3 சீசன் வரை தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த 3வது சீசனில் முதலிடத்தை ஸ்ருதிஹா, 2ம் இடத்தை தர்ஷன், 3ம் இடத்தை அம்மு அபிராமி ஆகியோர் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், கடந்த மூன்று சீசன்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் விஜே ரக்ஷன்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தொகுப்பாளர், கோமாளி, குக் என மாறி பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கும் ரக்ஷன், இந்த சீசன் இறுதி நிகழ்ச்சியின் போது பாதியில் வெளியேறினார். இதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு, மிகுந்த காய்ச்சல் இருந்ததாகவும், அதனால் கொரோனா இருக்குமோ? என பயந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாகவும், பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த மாதிரி எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
ஆனால், புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் இருந்து ரக்சன் பாதியில் வெளியேறியது குறித்து ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக, இனி வரும் நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்பாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.