அதிரடியாக திசை மாறிய விஜே சித்ரா மரண வழக்கு – ஹேமந்த்துக்கு எதிராக நண்பர் அளித்த வாக்குமூலம்!!

0
அதிரடியாக திசை மாறிய விஜே சித்ரா மரண வழக்கு - ஹேமந்த்துக்கு எதிராக நண்பர் அளித்த வாக்குமூலம்!!

விஜய் டிவியின் முன்னணி நட்சத்திரமான விஜே சித்ரா, இறப்பில் சந்தேகிக்கப்பட்ட அவரது கணவர் ஹேமந்த்துக்கு எதிராக அவரது நண்பர் ஒருவர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

மீண்டும் வழக்கு:

விஜய் டிவி முன்னணி நட்சத்திரமான விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பிற்கு காரணம் அவரது கணவர் ஹேமந்த் தான் என பலரும் குற்றம் சுமத்தினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

தற்போது ஹேம்நாத்துக்கு எதிராக, அவரது நண்பர் சையது ரோகித் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதாவது, சித்ரா இறப்புக்கு காரணம் ஹேமந்த் அளித்த தொல்லைகள் தான் என்றும், இதை வெளியே சொன்னால் தன்னை கொன்று விடுவதாக அவர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோக அவருக்கு எதிராக மற்ற நண்பர்கள், சாட்சி சொல்ல மறுத்த போது தான் மட்டும் சாட்சி சொல்லியதால் தன் குடும்பத்தை ஆளை ஏவி விட்டு கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  ஹேமந்த் வெளியே இருந்தால், சாட்சிகள் எதுவும் கிடைக்காது என்றும், அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கில், ஹேமந்த் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here