விஜே சித்ரா மரணத்தில், கைரேகை நிபுணர்கள் விசாரிக்கவில்லை என்றும், சிசிடிவி காட்சிகள் குறித்த ஆய்வுகள் நடைபெறவில்லை என்றும் முன்னாள் காவல் அதிகாரி வரதராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பகிரங்க குற்றம் :
முன்னணி சீரியல் நடிகையான விஜே சித்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில், மர்மம் இருப்பதாக கூறி அவருடைய கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தனர். நிபந்தனை ஜாமீனில் அண்மையில் வெளிவந்த ஹேமந்த், சித்ரா மரணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்து வருகிறார்.
இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது முன்னாள் போலீஸ் அதிகாரி வரதராஜன் இதுகுறித்து பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். அதாவது, அவர் மரணம் குறித்து கைரேகை விசாரணை நடைபெறவில்லை என்றும், சிசிடிவி காட்சிகள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற பட்டால் மட்டுமே உண்மை வெளிவரும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்