ஹேமந்த்தின் தந்தை கமிஷனர் அலுவலகத்தில் புகார் – சித்ரா மரண வழக்கில் புதிய திருப்பம்!!

0

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையில் கைது செய்யப்பட்டு உள்ள சித்ராவின் கணவர் ஹேமந்த்தின் தந்தை சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.

சின்னத்திரை சித்ரா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சித்ரா. அவரது கடின உழைப்பிற்கு 8 ஆண்டுக்கு பின் கிடைத்த பலன் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியல் அவருக்கு தக்க துணையாக இருந்தது. திடீரென்று அவர் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரது மரணத்தின் காரணம் மர்மமாகவே இருந்து வந்த நிலையில், சமீபத்தில் கணவர் ஹேமந்த் தான் இவரது தற்கொலைக்கு தூண்டுகோல் என்று ஹேமந்தை கைது செய்தனர் போலீசார். மேலும் இவருக்கு ஆர்டிஓ விசாரணை நடத்த உத்தரவு விடப்பட்டுள்ளது. இவரை ஸ்ரீபெரும்புதூர் கோட்டாசியர் விசாரணை நடத்தி வருகிறார்.

மத்திய அரசின் பனோரமா விருது – நடிகர் தனுஷின் ‘அசுரன்’ திரைப்படம் தேர்வு!!

இந்நிலையில் ஹேமந்த்தின் தந்தை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறியதாவது “சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு ஒர் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே நடக்கிறது, அதனை விரிவுபடுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் உண்மை வெளிவரும் ” என்று கூறியுள்ளார். ஏற்கனவே யாரோ ஒருவரை காப்பாற்ற தனது மகனை போலீசார் கைது செய்துள்ளதாக கூறி இவர் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here