துப்பறிவாளன் 2 படத்தை பொறுத்தவரை இயக்குனர் மிஷ்கினை நான் லண்டனுக்கு அழைத்து சென்றதே தவறு என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் கருத்து:
தமிழ் திரை உலகத்தில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். சமீபத்தில் இவர் நடித்து முடித்துள்ள எனிமி படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை கையில் எடுப்பதற்கு முன்பே, மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் இவருக்கும், இயக்குனர் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது இந்த படம் பாதியில் நிற்கிறது.
இதையடுத்து இந்த படத்தை தானே தயாரிக்க போவதாக நடிகர் விஷால் அண்மையில் அறிவித்தார். இது பற்றி பேசியுள்ள அவர், இயக்குனர் மிஸ்கினை படப்பிடிப்புக்காக லண்டனுக்கு அழைத்து சென்று இருக்கக்கூடாது என்றும் இங்கே படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இது முழுவதும் என் தவறுதான் என்று அவர் பேசியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்