இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி T20 போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வீரர்கள் அனைவரும் அபாரமாக விளையாடி தொடரை கைப்பற்றி விட்டனர். இந்நிலையில் இந்த தொடருக்கான 3 வது போட்டி 6 ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்கான ப்ளெயிங் 11 னில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஏனென்றால் இந்திய அணி தொடரை வென்று விட்டதால், 3 வது போட்டியில் பெஞ்சில் அமர்ந்துள்ள வீரர்களுக்கு ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பு கொடுப்பார் என தெரிகிறது. இதனால் 3 வது T20 ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி களமிறங்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எதிரணி வீரரை பங்கம் பண்ணிய இந்திய வீரர்.., மைதானத்தில் நடந்த தரமான சம்பவம்.., வைரலாகும் வீடியோ!!
இந்த தொடரை வெல்வதற்கு உதவியாக இருந்த விராட் அடுத்ததாக T20 உலக கோப்பைக்கு தயாராக உள்ளார். இதனால் தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது போட்டியில் களமிறங்கவில்லை என அரசல் புரசலாக பேசி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் என்னென்ன மாற்றங்கள் நடக்க போகுது என பொறுத்திருந்து பார்க்கலாம்.