உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து விராட் கோலி ரசிகர்களிடையே பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி
இந்தியாவில் இப்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் எந்த அணி பட்டத்தை வெல்ல போகிறது என்று தெரியவில்லை. மேலும் அனைத்து அணிகளும் பட்டத்தை வெல்வதற்காக கடுமையாக போராடி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தில் கூட ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த ஆட்டம் முடிந்த பிறகு பேட்டி அளித்த இவர், அனைவரும் புதுப் புது ஷாட்களை ஆடுகிறோம் என்ற பெயரில் விக்கெட்களை இழக்கின்றனர். ஆனால் நான் அப்படி கிடையாது. எங்களுக்கு தெரிந்த ஷாட்களை ஆடி அதிலே ரன் குவிப்பது தான் எங்களது வழக்கம்.
கொட்டுன முடி., இனி கட்டையா வளர இந்த oil போதும்.., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!
மேலும் அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரவுள்ளது. இதனால் அதற்கு தயாராகும் விதமாகவும் நான் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறேன் என அவர் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இக்கட்டான சூழ்நிலையிலும் இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை பற்றி யோசிப்பது வியப்பளிக்கிறது என்று கூறி வருகின்றனர்.