இந்திய அணியின் முன்னணி வீரராக திகழும் விராட் கோலி தற்போது, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்காக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். இவரது RCB அணி இன்று பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் நோக்கத்துடன் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த போட்டிக்கு முன்பாக, விராட் கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த பேட்டியில், இவரது ஜெர்சி எண் 18 நீங்களா கேட்டு வாங்கியதா?? என்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு, விராட் கோலி நானாக கேட்டுப் பெறவில்லை அவர்களாகவே கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
மேலும், இந்த எண் எனக்கு U19 அணியில் இருக்கும் போது கொடுக்கப்பட்டது. இதன் பின் இந்த எண் எனது வாழ்வின் முக்கிய எண்ணாக மாறியது. அதாவது, ஆகஸ்ட் 18 ஆம் தேதி (2008) நான் இந்திய அணிக்கு அறிமுகமானேன், டிசம்பர் 18ம் தேதி (2006) எனது தந்தை உயிரிழந்தார். இது போல, எல்லாம் எனக்கு 18 ஆகவே அமைந்தது என விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
View this post on Instagram