டி20 உலக கோப்பை தொடரின் சிறந்த நினைவை விராட் கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
விராட் கோஹ்லி:
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில், இந்திய அணி அரையிறுதியுடன் நாடு திரும்பியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய சீனியர் வீரர்களான, ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, தினேஷ் கார்த்திக், அஸ்வின் உள்ளிட்ட சிலருக்கு தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில், விராட் கோஹ்லி டி20 உலக கோப்பை தொடரின் சிறந்த நினைவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அக்டோபர் 23(பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி) என் இதயத்தில் எப்போதும் சிறந்ததாக இருக்கும். இந்த போட்டியில் கிடைத்த எனர்ஜியை, கிரிக்கெட்டில் இதற்கு முன் ஃபீல் பண்ணதே இல்லை. மிகவும் அற்புதமான மாலை நேரம் அது என்று கேப்சனில் பதிவிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொடர் தோல்வியை சந்திக்கும் கத்தார்…, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறுமா??
டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில், பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 160 ரன்களை சேஸிங் செய்த இந்திய அணியில், விராட் கோஹ்லி கடைசி வரை நின்று விளையாடி வெற்றியை உறுதி செய்திருந்தார். இதில், விராட் கோஹ்லி 53 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 82* ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இந்த போட்டியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒன்றும் ஆகும். இந்த போட்டியையே, விராட் கோஹ்லி குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram