இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அசத்துவதற்காக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோஹ்லிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோஹ்லி:
டி20 உலக கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை நாளை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியை வெற்றியுடன் கடந்து விட்டால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம். இதனால், இந்த இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வகையில், பாகிஸ்தான், நெதர்லாந்து, பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக அரைசதம் கடந்து அசத்தியதோடு, சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் 246 ரன்களுடன் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார். இவர், அரையிறுதியிலும் தனது அதிரடியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
3 வது முறையாக உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா நடத்த திட்டமா?? வெளியாகிய தகவல்!!
ஆனால், இன்று வலைப்பயிற்சியில் ஹர்ஷல் படேலின் பந்தை எதிர்கொள்ளும் போது இவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு ஏற்பட்ட காயம் பெரிதாக இல்லாததால் மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.