இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் LSG அணிகளுக்கு இடையேயான போட்டியை யாராலும் எளிதாக மறக்க முடியாது. அதாவது, கடந்த மே 1ம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில், RCB அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்த பிறகு, RCBயின் விராட் கோலிக்கும், LSGயின் ஆலோசகர் கம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதனால், ஐபிஎல் நடத்தை விதியை மீறிய குற்றத்திருக்காக இருவருக்கும் இந்த போட்டிக்கான முழுக்கட்டணத்தையும் அபராதமாக பிசிசிஐ விதித்தது. இதன் பிறகு, இவர்களுக்கு இடையிலான இந்த வாக்குவாதம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்காகவே இருந்தத்தது.
இதன் தொடர்ச்சியாக, விராட் கோலி மற்றும் கம்பீரை மையமாக வைத்து, சில அனிமேஷன் கேம்களும் உருவாக்கப்பட்டன. இந்த அளவுக்கு, இவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் வைரலானது. இந்நிலையில், ஹைதராபாத் அணியை எதிர்த்து மோதி வரும், லக்னோ அணியில் கம்பீரை பார்த்து ஹைதராபாத் ரசிகர்கள் “கோலி…, கோலி…” என விராட் கோலியின் பெயரை வைத்து அழைத்துள்ளனர். இதற்கு கம்பீர் எதையும் கண்டு கொள்ளாதது போல இருந்துள்ளார்.
Hyderabad crowd chanting “Kohli, Kohli”.pic.twitter.com/TotVEx0clV
— Johns. (@CricCrazyJohns) May 13, 2023