தங்கள் மகள் வாமிகா போட்டோவை இனி எங்கும் வெளியிட கூடாது – விராட் கோலி பகிரங்க எச்சரிக்கை!!

0

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மகள் வாமிகா சம்பந்தப்பட்ட புகைப்படத்தை இனி பொது வெளியில் வெளியிட கூடாது என விராட் – அனுஷ்கா தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

கோலி வேண்டுகோள்:

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நியூ லேன்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்தது. தவானுடன் கைகோர்த்த விராட் கோலி படு பயங்கரமாக விளையாடி அரை சதம் விளாசினார். இவர் அரைசதம் அடித்த உடன், அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக, கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தனது மகள் வாமிகாவுடன் வெளியே வந்தார். இதையடுத்து, தனது கிரிக்கெட் மட்டையை குழந்தையைப் போல் தாலாட்டி காண்பித்து, வாமிகாவை  பார்த்து விராட் சிரித்தார்.

இந்த நெகிழ்ச்சி தருணத்தை, சுற்றி இருந்த ரசிகர்கள் போட்டோ எடுத்துக் சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். இந்த நிலையில், விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா இருவரும் சேர்ந்து இன்ஸ்டாவில் முக்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளனர். இதன்படி தங்கள், மகள் வாமிகா சம்பந்தப்பட்ட புகைப்படங்களை இனி பொதுவெளியில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here