சென்னை வந்தடைந்த விராட் கோலி…, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் விளாசுவாரா??

0
சென்னை வந்தடைந்த விராட் கோலி..., ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் விளாசுவாரா??
சென்னை வந்தடைந்த விராட் கோலி..., ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் விளாசுவாரா??

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் போட்டிக்காக விராட் கோலி சென்னையை வந்தடைந்துள்ளார்.

IND vs AUS:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளை விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 2வது போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால், இந்த ஒருநாள் தொடரை வெல்வதற்கு இரு அணிகளும் முன்னிலை பெற்றுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க கூடிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நாளை மறுநாள் (22ம் தேதி) நடைபெற பெற இருக்கிறது. இந்த ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற எந்த ஒரு தொடரையும் இந்திய அணி இழக்கவே இல்லை. இதனால், இந்த 3 வது போட்டியையும் இந்திய அணி வென்று, சொந்த மண்ணில் தொடரை இழக்காத அணி என்ற சாதனை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: வெற்றி பாதைக்கு திரும்ப தயாராக இருக்கும் பி வி சிந்து, எச்.எஸ். பிரணாய் இந்திய வீரர்கள்!!

இந்த கடைசி ஒருநாள் போட்டிக்காக, இந்தியாவின் விராட் கோலி சென்னை வந்துள்ள போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில், பல மாதங்களுக்கு பிறகு சர்வதேச அணிகள் மோதும் போட்டி என்பதால், உள்ளூர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல்லின் தோனியின் CSK அணியானது பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், தோனியையும் இந்திய ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here