Wednesday, April 24, 2024

விராட், அனுஷ்கா ஜோடியின் திருமண நாள் இன்று – அரிய புகைப்படங்கள் ட்ரெண்டிங்!!

Must Read

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் இன்று தங்களது 4வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தற்போது விராட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காதல் டூ கல்யாணம்:

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்தார். அனுஷ்காவிற்கு அவரை பிடித்திருந்ததால் அவர்கள் இருவரும் காதலித்தனர். பல நாட்களாக தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறி வந்தனர். பின், ஒரு வழியாக ஒத்து கொண்டனர். இருவரது பெற்றோர்களின் சம்மதத்தோடு கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இந்தியாவின் சிறந்த தம்பதியர்களாக பார்க்கப்பட்டனர். அவர்களது திருமணத்தில் வெறும் 42 பேர் மட்டுமே பங்கேற்றனர். இது குறித்து அனுஷ்கா கூறுகையில், “எங்களது திருமணம் பெரிய செலிபிரிட்டி திருமணமாக இருப்பதை நான் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பொது முடக்கத்தின் போது அனுஷ்கா கர்ப்பமாக உள்ள செய்தியினை இருவரும் உறுதி செய்தனர்.

இதனை அடுத்து இவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருக்கும் விராட், குழந்தை பிறக்கும் போது தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நாடு திரும்பவுள்ளார்.

ஆஸ்திரேலியா அணி அசத்தல் பந்துவீச்சு – இந்தியா A அணி பேட்ஸ்மேன்கள் திணறல்!!

இந்த ஜோடி இன்று தங்களது 4 வது திருமண நாளை கொண்டாடவுள்ளனர். இதனை நினைவு கூறும் வகையில் விராட் தங்களது திருமணத்தில் எடுத்த அரிய புகைப்படத்தை வெளியிட்டு, “3 ஆண்டுகள் கடந்து விட்டது, வாழ்நாள் முழுவதும் ஒன்றாக பயணிப்போம்” என்று பதிவிட்டிருந்தார். அதேபோல் அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராமில் இருவரும் சேர்ந்த்திருப்பது போல் புகைப்படத்தை பதிவிட்டு கேப்ஷனாக, “நாம் இருவரும் ஒன்றாக 3 ஆண்டுகள், விரைவாக 3 பேராக, மிஸ் யூ” என்று பதிவிட்டுள்ளார். தற்போது அனைவரும் இருவரையும் வாழ்த்தி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -