இந்திய அணியின் கேப்டனாக திகழும் விராட் கோலி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் டி20, ஒரு நாள் போட்டி கேப்டன் பதிவியில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.
விராட் கோலி
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி ஓய்வு பெற்றதற்கு பிறகு இந்த அணியின் கேப்டனாக தனது கடமையை சிறப்பாக செய்து வந்தவர் தான் விராட் கோலி. என்ன தான் கேப்டனாக இருந்தாலும் தனது பேட்டிங் திறமையின் மூலம் பல முறை இந்திய அணிக்கு வெற்றியை ஈட்டி கொடுத்துள்ளார். இதுவரை 95 ஒரு நாள் போட்டியில் கலந்து கொண்டு அதில் 65 போட்டிகளில் வெற்றியை ஈட்டியுள்ளார். மேலும் 45 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு அதில் 29 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
இப்படி பல வெற்றிகளை குவித்து ஏகப்பட்ட ரசிகர்களை குவித்து வைத்திருக்கும் விராட் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 3 பிரிவுகளில் கேப்டனாக இருந்து வந்த கோலி ஏற்பட்ட கஷ்டங்களை சந்தித்து வந்துள்ளார். இதனை நிர்வாகத்துடன் பகிர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் கேப்டன்ஷிப்பில் சில மாற்றங்கள் வரும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன் படி டி20 ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். மேலும் அதற்கு பதிலாக தான் ரோகித் ஷர்மாவை நியமிக்கவுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்