நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை வழக்கம் போல் கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளன்று பொது மக்கள் பலர் சிலை வைத்து வழிபாடு செய்வார்கள். இத்தகைய விநாயகர் சிலையை மக்கள் கொண்டாட்டங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கமான ஒன்று.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விநாயகர் சிலை ஊர்வலங்களால் மக்களுக்கு என்ன பயன்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், “சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல கடவுளே கேட்காத நிலையில் மக்களுக்கு இதனால் என்ன பயன்?? விநாயகரை வைத்து அரசியல் தான் செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கேள்விகள் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அனுமதி இல்லாமல் எந்த மதுபான பார்கள் இயங்கவில்லை – அமைச்சர் முத்துசாமி அதிரடி பேட்டி!!