மருத்துவ அவசர சிகிச்சைகளுக்கு பெரும் உறுதுணையாக இருப்பது ஆம்புலன்ஸ் சர்வீஸ். தற்போது இந்த 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான முகாம் நாளை (ஜனவரி 27) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த பணியிடங்களுக்கு B.Sc. நர்சிங், GNM, ANM, TMLT கல்வி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு B.Sc.லைஃப் சயின்ஸ் பட்டதாரிகளுக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு 24 முதல் 35 வயதுக்குள் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் டிரைவர் பேட்ஜ் உரிமம் பெற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும்.
இந்த தகுதியுடையவர்கள் அசல் சான்றிதழுடன் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ள முகாம்களில் பங்கு பெறலாம். இவ்வாறு தேர்ச்சி பெறும் மருத்துவ உதவியாளர்க்கு ரூ.15,435யும், டிரைவருக்கு ரூ.15,235யும் மாத ஊதியமாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044 -28888075, 044 -28888077, 9154251239, 9154251229, 7397724836, 7550030685 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளனர்.