தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அரசு அலுவலகங்கள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராம மக்கள் இதுவரை தங்களது சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்டவைகளை ஊராட்சி அலுவலகங்களில் ரசீது புத்தகம் மூலம் மட்டுமே கட்டி வந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வரி கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியை தமிழக அரசு மேம்படுத்தி வந்தது. அதன்படி கிராம மக்கள் தங்களுக்கான வரி கட்டணங்களை நாளை முதல் tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் செலுத்தலாம் என அறிவுறுத்தி உள்ளனர். இது போக onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கிராம ஊராட்சி மக்களிடம் ரொக்கமாக எந்த தொகையும் நாளை முதல் பெறக்கூடாது. இதற்கான நடவடிக்கையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.