விஜய் டிவி சீரியல்கள் என்றாலே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குடும்ப தொடர்களாகவே இருந்து வந்த தமிழும் சரஸ்வதியும் தற்போது முதலிரவு குறித்தான சர்ச்சையில் சிக்கி கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
ஓமைக்ரானை விட வேகமாக பரவும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் அறிவிப்பால் பீதியில் மக்கள்!!
தமிழும் சரஸ்வதியும்:
விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் தீபக் மற்றும் நட்சத்திரா ஆகியோர் நடித்துள்ளனர். படிக்காத தீபக்கிற்கு படித்த பொண்ணை தான் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று பெற்றோர்கள் துடித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தீபக் படிக்காத நட்சத்திராவை காதலித்து வருகிறார். இதனால் இருவரின் காதலும் ஒன்று சேருமா என பல எதிர்பார்ப்புகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
இந்த தொடர் மக்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இந்த தொடரின் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு பெண் தனது அறையில் முதலிரவுக்காக காத்து கொண்டிருக்கிறார். அப்போது வயதான ஒரு பெண்மணி அங்கு சென்று முதலிரவென்றால் இப்படி தான் பதட்டமாக இருக்கும் என கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் தைரியமாக தான் இருக்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண்மணி இரட்டை அர்த்தத்தில் ஒரு வசனத்தை கூறுகிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்