நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் – வெளியான பகீர் அறிக்கை!!

0
நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் - வெளியான பகீர் அறிக்கை!!

கோலிவுட்டின் முன்னணி நடிகரும், பிரபல அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நள்ளிரவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு சம்பவம் :

தமிழ் சினிமாவில் தனது அதிரடி நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் கேப்டன் என பெயர் எடுத்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமா மட்டுமல்லாது, அரசியலிலும் தனது அழுத்தமான முத்திரையை பதித்த இவர் சினிமாவுக்கு எண்ட் கார்டு போட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் இவருக்கு, அண்மையில் தொண்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தீவிர ஓய்வில் இருந்த வந்த இவருக்கு மீண்டும் உடல் நேற்று நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

vijayakanth and premalatha discharge

நேற்று நள்ளிரவில் இவர் மீண்டும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த, இவரின் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேப்டன் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என அறிக்கை வெளியாகியுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் இவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here