தமிழக சட்டமன்ற தேர்தல் – விருப்ப மனுவை தாக்கல் செய்த விஜய் வசந்த்!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விஜய் வசந்த் தற்போது விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தற்போது தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு மறைந்த வசந்த குமார் மகன் விஜய் வசந்த் தற்போது விருப்ப மனுவை அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களவை தொகுதியில் வசந்தகுமார் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் கடந்த ஆண்டு அவர் உடல் நல குறைவு காரணமாக உயிர் இழந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியை காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ராகுல் காந்தி ஒரு கோமாளி – பாஜக பொறுப்பாளர் மறைமுக விமர்சனம்!!

காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதத்தில் அந்த தொகுதியில் தேர்தல் நடத்த வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. தற்போது காங்கிரஸ் கட்சி சார்பாக விஜய் வசந்த் போட்டியிடுவதற்கு தனது விருப்ப மனுவை சமர்ப்பித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here