இன்று முதல் விஜய் தொலைக்காட்சியில் அனைத்து சீரியல்களும் புதிய கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகும் என்று தெரிவித்திருந்த நிலையில் 2 சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சி
இந்த லாக்டவுன் காலத்தில் மக்கள் அனைவரும் சற்று மன நிம்மதி பெற்று வருகிறார்கள் என்றால் அதற்கு சீரியல் தான் காரணம். சீரியல் மூலம் விஜய் டிவி அனைத்து தரப்பு மக்களையும் தனது பக்கம் கட்டி வைத்துள்ளது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிக்கு எப்போதும் கடும் போட்டி நிலவி வரும்.
ஆனால் பெரும்பாலும் விஜய் தொலைக்காட்சி சீரியல் தான் டாப் ரேட்டிங் பெற்று வரும். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சீரியல் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உட்பட பல சீரியல்கள் ஏற்கனவே ஒளிபரப்பான காட்சிகள் மீண்டும் ஒளிபரப்பாக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் புதிய கதை அம்சங்களுடன் சீரியல் அனைத்தும் ஒளிபரப்பாகும் என்று விஜய் தொலைக்காட்சி தெரிவித்தது. ஆனால் 2 சீரியல்கள் ஒளிபரப்பாக தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அது என்ன சீரியல் என்றால் மௌன ராகம் 2 மற்றும் வேலம்மாள் சீரியல் தான். இந்த 2 சீரியலும் தற்போது வரை படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லையாம். இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்