விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவின் மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
வேண்டுகோள் வைத்த ஜெனி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர் பாக்கியலட்சுமி. ஒரு குடும்பத் தலைவி இந்த சமூகத்தில் என்னென்ன பிரச்சனைகளை அனுபவிக்கிறார் என்பதை பாக்கியா வெட்டவெளிச்சமாக நடித்து காட்டி உள்ளார். இதனால் இந்த சீரியல் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.
இந்த தொடரில் பாக்கியாவின் மருமகளாக, செழியன் மனைவியாக ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். தனது எதார்த்தமான நடிப்பில் பல ரசிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரும், கம்பம் மீனாவும் இணைந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டு வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். அதாவது வெளியே பயங்கரமாக மழை பெய்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்