விஜய் டிவியில் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சக்கை போடு போட்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 தான். ஆனால் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டதால் இந்த சீரியலின் சீசன் 1 பாதியிலேயே தடைப்பட்டது.
இதில் ரக்ஷா, ரேஷ்மி ஜெயராஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர். ரேஷ்மி ஜெயராஜ் தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ராஜா பார்வை என்ற தொடரில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்.
ஆனால் ரக்ஷாவை பிறகு எந்த தொடரிலும் காண முடிவதில்லை. இந்நிலையில் இவரை பற்றிய ஒரு சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது. ரக்ஷா தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க களம் இறங்கியுள்ளார். அதாவது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அன்பே சிவம் சீரியல் மூலம் மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளார் நடிகை ரக்ஷா.
இவரின் எதார்த்தமான நடிப்புக்கு நிறைய ரசிகர்கள் இருந்த நிலையில் இவரின் ரீஎன்ட்ரி சின்னத்திரை ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தி உள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பிடித்த இடத்தை இவர் இதன் மூலம் தக்க வைப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்