விஜய் டிவி முன்னணி தொகுப்பாளினியான பிரியங்கா, இதுக்காக நான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்தேன் என தன் இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இன்ஸ்டா பதிவு:
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. சூப்பர் சிங்கர் ஆங்கராக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவர், விஜய் டிவியின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்கு சென்ற இவர், அதில் 2ம் இடம் பிடித்து அசத்தினார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
சமீப காலமாக, இவர் தனது கணவர் பிரவீனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் செல்லும் இடங்களில் எல்லாம் என் அம்மா, தம்பி மட்டுமே என்னுடைய உலகம் என வெளிப்படையாக கூறி வந்தார். அந்த வகையில் பிரியங்காவின் தம்பிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை பிறந்த 6 மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது அவரது தம்பி குடும்பத்துடன் பிரியங்கா வீட்டுக்கு வந்துள்ளார். இதை இன்ஸ்டாவில் வெளியிட்ட பிரியங்கா, கடைசியில் நான் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது. இதைவிட வேறு எந்த மகிழ்ச்சியும் இல்லை அவ வந்துட்டா, ஆன்ட்டி கிட்ட வாம்மா என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram