சின்னத்திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பிரஜன், இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என வெளிப்படையாக ஒரு பேட்டியில் அறிவித்துள்ளார்.
பிரஜன் அறிவிப்பு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்ன தம்பி என்ற சீரியலில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகர் பிரஜன். இந்த சீரியலின் முடிவை தொடர்ந்து அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். அதிலும் வைதேகி காத்திருந்தாள் என்ற தொடரில் நடிக்கும் போதே, திடீரென அதில் இருந்து நீக்கப்பட்டார். விஜய் டிவி போக சன் டிவியின் ஒரு சில தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தற்போது வரை 7 படங்களில் நடித்து வருவதாக தெரிவித்தார். இதனால் இனி சீரியலுக்கு வரும் ஐடியா இல்லை என்றும், தொடர்ந்து படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்றும் கூறினார். இது போக தனது மனைவி சாண்ட்ரா குழந்தைகளை கவனிப்பதில் பிசியாக உள்ளதால், அவரும் இனி சீரியலில் நடிக்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்