கதிருக்கு 2ம் திருமணம் செய்துவைக்கும் குடும்பம் – முல்லை எடுக்கும் விபரீத முடிவு! சூடு பிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க சொல்லி, குடும்பத்தினரை முல்லை வற்புறுத்துவதால், இனிவரும் காட்சிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

சூடுபிடிக்கும் சீரியல் :

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முல்லைக்கு, குழந்தை பாக்கியம் இல்லை என்ற காரணத்தினால் அவர் மனதளவில், மோசமாக பாதிக்கப்படுகிறார். தன்னால் குழந்தை பெற்றுத்தர முடியாது என்பதை உணர்ந்து, தனது கணவர் கதிருக்கு 2வது திருமணம் செய்து வைக்கும் படி, குடும்பத்தினரிடம் கூறுகிறார்.

முதலில் இதனை மறுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், கதிருக்காக இதனை ஏற்றுக் கொள்கிறார்கள். முதலில் இதற்கு, சம்மதிக்க மறுக்கும் கதிர் மனைவியின் வற்புறுத்தலினால் இதற்கு ஒத்துக்கொள்வது போன்ற காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.

இந்த திருமணத்திற்கு பிறகு, மனமுடைந்த முல்லை விபரீத முடிவு எடுக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இந்த அடுத்த கட்ட நகர்வு குறித்த காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here