விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து, நான் விலகுவதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்கும் என குமரன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
குமரன் பதிவு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஆரம்பத்தில் இருந்து பல வித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. இந்த தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி சமீபத்தில் இதிலிருந்து விலகினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவரைத் தொடர்ந்து, இவருக்கு ஜோடியாக கதிர் பாத்திரத்தில் நடித்து வரும் குமரன் விலக உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் இது குறித்த உண்மைகளை அவரே தெரிவித்துள்ளார். அதாவது தான் அமேசான் பிரைமில் வதந்தி என்ற வெப் சீரிஸில் நடித்த போது, இது போன்ற பிரச்சனைகள் இருந்தது. இருந்தாலும் எனக்கு சீரியல் டீம் கொடுத்த மிகப்பெரிய சப்போர்ட்டினால் தொடர்ந்து இதில் நடித்து வந்தேன்.
சீரியல் குழு நேர மாற்றம், தந்ததால் என்னால் இரு பக்கமும் பேலன்ஸ் செய்ய முடிந்தது. இனி வரும் காலங்களில் இந்த நேர மாற்றம் அமையாமல் கூட போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் அதிரடி முடிவு எடுப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை. ஆகவே, அந்த மாதிரி நேரத்தில் நான் சீரியலில் இருந்து விலக அதிக வாய்ப்புகள் உண்டு என அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.