போலீசில் மாட்டிய கண்ணன் – கொந்தளிக்கும் மொத்த குடும்பம்! பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், இரவில் வெளியே சென்ற கண்ணன் ஐஸ்வர்யா தம்பதி போலீசில் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி தொடர்ந்து கண்ணன் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதால், மொத்த குடும்பமும் இவர்களை வெறுக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், இரவில் கண்ணனும் ஐஸ்வர்யாவும்  சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு செல்கின்றனர். பணத்தைக் கண்ணன் வீட்டில் மறந்து வைத்து விடுவதால், பில் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தன் அண்ணன் ஜீவாவின் உதவியை நாடுகிறார். இது ஒருபுறமிருக்க, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் போலீசில் சிக்கிக் கொள்கின்றனர்.

தாங்கள் கணவன் மனைவி என இருவரும் எவ்வளவு கூறியும் போலீசார் கேட்கவில்லை. வீட்டில் இருந்து யாராவது வந்தால் தான் விடுவேன் என கூறிய போலீசார் இருவரையும் அழைத்து செல்கின்றனர். இதையடுத்து, ஜீவா மற்றும் மீனா இருவரும் வந்து இவர்களை காப்பாற்றுகின்றனர். இப்படி கண்ணன் தொடர்ந்து பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதால் ஒட்டுமொத்த குடும்பமும் இவர்களுக்கு எதிராக மாற போவது போன்ற கதைக்களம் இனி காட்டபட உள்ளதாம். விரைவில் இதுகுறித்த காட்சிகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here