விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் மிகவும் கோபமாக பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கோபத்தில் கண்ணன்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாச கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.
அவர் இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், தனது குடும்பத்தாரால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் வடிவேலுவின் புகழ்பெற்ற திரைப்பட காமெடி வசனத்திற்கு விடாது பெய்யும் மழையை திட்டி தீர்த்தபடி ரீல்ஸ் செய்துள்ளதை பார்த்த ரசிகர்கள் சிரிப்பலையில் மூழ்கியுள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்