விஜய் தொலைக்காட்சியில் 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் நடித்து வரும் மிர்ச்சி செந்தில், ஜனனி மற்றும் காயத்ரி தற்போது இன்ஸ்டாகிராமில் லைவ் வந்து ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தில் மிர்ச்சி சிவா, மாயன் மற்றும் அரவிந்த் என்ற இரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாம் பாகத்தில் மாயன் கதாபாத்திரத்தில் மட்டுமே மிர்ச்சி சிவா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரக்ஷிதா மகாலட்சுமி நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் இடையே ஒரு தனி வரவேற்பு உள்ளது. சமீபத்தில் இந்த சீரியலின் 200 வது எபிசொட் ஒளிபரப்பட்டது.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் ரசிகர்கள் மிர்ச்சி செந்திலிடம் இன்ஸ்டாகிராமில் லைவ் வரச்சொல்லி பல நாட்களாக கேட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்காக நேற்று மிர்ச்சி செந்தில், அந்த சீரியலின் நடிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் லைவ்வில் வந்தார். அந்த சீரியலில் நடித்து வரும் ஜனனி, காயத்ரி யுவராஜ், நவீன் மற்றும் தீபா ஆகியோர் அந்த லைவ்லில் கலந்துகொண்டனர்.இந்த லைவ் வீடியோ இன்ஸ்டாவில் 85000 பார்வைகளை கடந்துள்ளது. மேலும் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமியுடன் எப்போது லைவ்வில் வருவீர்கள் என மிர்ச்சி செந்திலிடம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!