தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவி சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக, இந்த சேனலில் ஒளிபரப்பப்படும் ஒரு சில ரொமான்டிக் சீரியல்கள் இளைஞர்களின் பேவரைட் லிஸ்டில் இருக்கிறது. அப்படிப்பட்ட சீரியல்களில் ஒன்று தான் ‘காற்றுக்கென்ன வேலி’. ஒரு கல்லூரி ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையேயான காதலை சொல்லும் இந்த சீரியலுக்கு பேன்ஸ் அதிகம். தற்போது ‘காற்றுக்கென்ன வேலி’ தொடரில் கதாநாயகன் சூர்யாவுக்கும் கதாநாயகி வெண்ணிலாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால், மீனாட்சி வீட்டை விட்டு தனது அப்பா அம்மாவுடன் வெளியே வந்த சூர்யா என்ன செய்யப்போகிறார் என்ற விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடர். இப்படி இருக்க, ‘காற்றுக்கென்ன வேலி’ தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் டிவியில் ‘நீ நான் காதல்’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதால் ‘காற்றுக்கென்ன வேலி’ முடிவுக்கு வர இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.