விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது கண்ணே கலைமானே சீரியல்.இதில் ஹீரோவாக நந்தகோபால் ராமம் என்ற பெயரிலும் ஹீரோயினாக பவித்ரா கவுடா நடித்துள்ளார். மேலும் இதில் ராமின் இரண்டாவது மனைவியாக ராஷ்மி பிரபாகர் நடித்துள்ளார்.
ஏழை குடும்பத்தை சேர்ந்த பார்வையற்ற பெண் பானுமதியை திருமணம் செய்த ராமுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இதன் பிறகு ஒரு கட்டத்தில் தன் வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகளை ராம் இழக்கிறார். இதனால் இரண்டாவதாக மாது பிரியாவை திருமணம் செய்து கொண்ட ராமுக்கு பானுமதி தான் தனது முதல் மனைவி என பல வருடங்களுக்குப் பிறகு தெரிய வருகிறது.
என்னதான் தனக்கு உண்மை தெரிந்தாலும் அதை யாருக்கும் வெளிப்படுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில் ராம் சிக்கி தவித்து வருகிறார். இப்படியான விறுவிறுப்பான கதைக்களத்துடன் டெலிகாஸ்ட்டாகி வரும் இந்த சீரியல் தற்போது 200 எபிசோடுகளை தொட்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதனை அந்த சீரியல்குழு இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் இந்த சீரியல் குழுவுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.