ரசிகர்களை குஷிப்படுத்த வரும் லொள்ளு சபா நிகழ்ச்சி – மறு ஒளிபரப்பு..!

0

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது விஜய் தொலைக்காட்சி.

லொள்ளு சபா..!

2004ல் விஜய் தொலைகாட்சி ஆரம்பித்த லொள்ளு சபா நிகழ்ச்சி கிட்டதட்ட மூன்று வருடங்கள் ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் என்று சொல்ல கூடிய பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களின் ஓட்டத்தை துவங்கினார்கள். இதில் சந்தானம் ,யோகிபாபு, சுவாமிநாதன், ஜீவா, மனோகர், உதய், ஈஸ்டர், சாஷா என்று பலரும் புதிய முகங்களாக மக்களுக்கு அறிமுகமாகி தங்களின் திறமைகளை மக்களுக்கு காட்டி சிரிக்க வைத்து பிரபலங்கள் ஆனார்கள்.

லொள்ளு சபாவின் காமெடி மட்டுமல்ல லொள்ளு சபாவின் ஓபனிங் சாங் என்று சொல்ல கூடிய நிகழ்ச்சியின் ஆரம்ப பாடல் கூட மக்களின் மனம் கவர்ந்தது தான். தற்போது விஜய் தொலைகாட்சி செய்யும் விளம்பரங்களில் கூட அந்த ஓபனிங் பாடலை தான் போட்டு விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

மறு ஒளிபரப்பு..!

கொரோனாவால் அறிவிக்கபட்ட ஊரடங்கு நேரத்தில் அனைத்து தொலைகாட்சிகளும் தங்களின் பழைய நாடகங்களை மறு ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் லொள்ளு சபாவை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டனர். இதனால் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று லொள்ளு சபா நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.30 மணிக்கு ஒளிப்பாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்த்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here