விஜய் டிவியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ப்ரஜன் முதன்முறையாக தனது குழந்தைகளின் பிறந்த நாளில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் யாவும் வைரலாகி வருகிறது.
ப்ரஜின்
சன் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் வில்லனாக அறிமுகமானவர் ப்ரஜின். ஆரம்பத்திலேயே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற சீரியலில் நடித்து மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த சீரியலுக்கு பிறகு வெள்ளித்திரையில் நடிக்க சென்று விட்டார். ‘பழைய வண்ணார பேட்டை’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் வெளிவர 5 வருடங்களுக்கு மேல் ஆனது. வெளிவந்த பிறகும் அந்த படம் ஹிட் கொடுக்கவில்லை. அதன் பிறகு அவருக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இதனாலேயே மனம் நொந்து போன அவர் சீரியலுக்கு தாவினார். அவர் நடித்த சின்னத்தம்பி சீரியல் சக்கை போடு போட்டது. எதார்த்தமான கிராமத்து இளைஞனாய் வந்து கலக்கி இருப்பார். அவருக்கு இந்த சீரியல் மூலம் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
முதலில் அவரை சரவணன் மீனாட்சியில் நடிக்க கூப்பிட்டார்களாம். ஆனால் அந்த கதை அவருக்கு பிடிக்காமல் போனதால் ஒப்புக்கொள்ளவில்லையாம். தற்போது அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் சாண்ட்ராவிற்கும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு பிறகு தான் குழந்தை பிறந்தது.
இதுவரையிலும் குழந்தையை காட்டாத அவர் தற்போது தனது வலைதளப்பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.