கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜாக்குலினின் உடன்பிறந்த தம்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு இப்படி ஒரு தம்பியா?? என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
ஜாக்குலின்
தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நாயகியாக உருவெடுத்துள்ளவர் தான் நம்ம ஜாக்குலின். எப்பொழுதுமே ஒரு தொகுப்பாளர் என்றால் நல்ல குரல்வளம், இனிமையான பேச்சுக்கு சொந்தக்காரராக இருப்பவரை தான் நாம் பார்த்துள்ளோம். ஆனால் முற்றிலும் வித்தியாசமான களமிறங்கியவர் தான் ஜாக்குலின்.
கட்டை குரலுடன் பேசிய இவரை பார்த்து பலரும் கலாய்க்க தான் செய்தனர். மேலும் மக்கள் மத்தியிலும் நாளடைவில் பிரபலமானார். ரக்சன், ஜாக்குலின் காம்போ மக்களுக்கு பிடித்து போனது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு காமெடி சாம்பியன் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
அதன் பிறகு அவருக்கு தேன்மொழி சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன் அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த ஜாக்குலின் அவரது திறமையால் தான் இந்த அளவிற்கு வளர்த்துள்ளார் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியிலும் கலக்கி வந்தார். இவருக்கு ஒரு தம்பி உள்ளது நாம் அனைவர்க்கும் தெரியும். ஆனால் நாம் அந்த அளவிற்கு அவரை பார்த்திருக்க மாட்டோம். இப்பொழுது அவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நம்ம ஜாக்குலின். இந்த புகைப்படதிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.