விஜய் டிவி யில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த டிடி தற்போது லைவில் ரசிகர்களுக்கு பல சந்தேகங்களை தெரிவு செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய் டிவி டிடி
விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரை போல தொகுத்து வழங்குபவர் யாரும் உண்டா எண்ணும் அளவிற்கு மக்களிடம் இடம் பிடித்திருந்தார். விஜய் டிவி என்றாலே டிடி க்கு ஒரு தனி இடம் இருந்தது. நீண்ட வருடங்களுக்கு பின்பு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமண விழா விஜய் டிவியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு சில வருடங்களிலேயே இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. இது ரசிகர்களுக்கு சோகத்தையும் ஏற்படுத்தியது.அடிக்கடி பல புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்குரிய கருத்தையும் வெளியிடுவார் டிடி.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படி அவரின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க விஜய் டிவியின் வாய்ப்புகளும் அவருக்கு குறைந்து வருகிறது. பிரியங்கா, மா.கா.பா என பலர் புதிதாக இணைந்ததால் டிடிக்கு வாய்ப்பு பறிபோனது. மேலும் அவருக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனையால் நீண்ட நேரம் நிற்க முடியாத காரணத்தாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.அதாவது எப்போவிஜய் டிவிக்கு வருவீங்க என்று கேட்க நானா வர மாட்டேன் சொல்றேன். இன்னும் வாய்ப்பு வரல, கால் இப்படி இருக்கதால நிக்க முடியாதுல அதனாலையும் யோசிக்க வேண்டியதா இருக்கு என்று கூறியுள்ளார்.