விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் “பிக் பாஸ் 5” நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்த செய்தி காட்டு தீயாய் இணையத்தில் பரவி வருகிறது.
“பிக் பாஸ் 5” நிகழ்ச்சி
கடந்த 4 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான், “பிக் பாஸ்”. பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு விரைவாகவே “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் சீசன் 5 ஒளிபரப்பப்படும் என்று தெரிகிறது. காரணம், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தாமதமாக தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இப்படியாக இருக்க, இந்த ஆண்டு நடிகர் சிம்பு தான் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க இருக்கிறார் என்றும் தெரிகிறது.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் பாகுபலி நடிகையா?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
காரணம், நடிகர் கமல் ஹாசன் தற்போது மிக தீவிரமாக அரசியலில் இறங்கி விட்டார். இதனால் சிம்பு இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக இருக்க, இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
“குக் வித் கோமாளி” புகழ் அஸ்வின், கனி, 90ஸ் நடிகை கிரண், வில்லன் நடிகர் ராதாரவி ஆகியோர் பங்கேற்க இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, “தளபதி” விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த மஹேந்திரன் பங்கு கொள்வார் என்றும் தெரிகிறது. கடந்த சீசனின் போதே இவர் பங்கு பெற இருந்ததாம். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவரால் பங்கு பெற இயலவில்லை.இவர்களிடம் பேச்சுவார்தையினை பிக் பாஸ் டீம் நடத்தி வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.