விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் டெலிகாஸ்ட்டாகி வருகிறது. இந்த சீரியலில் கோபி வீட்டை விற்கப்போவதாக கூற பாக்கியா குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் மன நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த விஷயம் எழிலை காதலிக்கும் வர்ஷினிக்கு தெரிய வருகிறது. இதை சாக்காக வைத்துக் கொண்டு ஈஸ்வரி மற்றும் செழியனிடம் குடும்பத்தில் இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி எனக்கும் எழிலுக்கும் திருமணம் செய்து வைங்க என்று கூறுகிறார். அப்படி செய்தால் உங்களுக்கு தேவையான பணத்தை என் அப்பா எழிலுக்கு தருவார் என்று செல்கிறார்.
அஜித்தின் துணிவு படத்துக்காக 12ம் வகுப்பு மாணவி மரணம்.., அதிர்ச்சியில் படக்குழுவினர்!!
பின் இருவரும் எழிலிடம் குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகின்றனர். அதற்கு அவர் முடியவே முடியாது என்று கூற, ஈஸ்வரி கோபத்துடன் இதை நீ செய்யாட்டி நம்ம குடும்பம் நடுத்தெருவுல தான் நிக்கும் என்று மிரட்டுகிறார். இதை வைத்து பார்க்கும் போது ஒருவேளை எழில் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாரா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.