விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில், கோபி பாக்கியாவிடம் சென்று அவரை வீட்டுக்கு கூப்பிடும் போது தவறுதலாக நீ தான் என் உலகம் ராதிகா என சொல்லி பாக்கியாவை மேலும் கடுப்பாக்குகிறார்.
கடுப்பில் பாக்கியா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது, பாக்யாவுக்கு ராதிகா மற்றும் கோபி இடையேயான உறவு பற்றி தெரிந்ததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். தொடர்ந்து இவரிடம் இவரது மாமனார் மற்றும் மாமியார் இருவரும் வந்து சமாதானம் பேசியும், இவர் வீட்டுக்கு வர சம்மதிக்கவில்லை.
பாக்யாவை நினைத்து, அவரது மகள் இனியா அழுது கொண்டே இருக்கிறார். இதனால் மனமிரங்கிய கோபி, பாக்கியாவிடம் சென்று பேசுகிறார். அப்போது, இவ்வளவு நாட்கள் பிடிக்காமல் தான் உன்னுடன் வாழ்ந்தேன் என்றும், நீதான் குடும்பம் குடும்பம் என்று என்னை கவனிக்காமல் விட்டு விட்டாய் என அவர் மீது குற்றம் சுமத்துகிறார்.
உன்னிடத்தில் மன்னிப்பு கேட்கவோ, உன் காலில் விழுந்து கெஞ்சவோ நான் வரவில்லை, இனியாவுக்காக நீ வீட்டுக்கு வர வேண்டும் என திமிராக பேசுகிறார். இதையெல்லாம் விட உச்சகட்டமாக, சத்தியம் செய்யும் போது கூட, நீ தான் என் உயிர் “ராதிகா” என சத்தியம் செய்யப் போகிறார். இதை பார்த்ததும் பாக்கியா வெறுப்பின் உச்சத்துக்கு செல்கிறார்.
இதனால், பாக்கியா இனி கோபியுடன் சேர்ந்து வாழ வழியில்லை என்றும் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இனி பாக்கியா சொந்த காலில் நின்று குடும்பத்தை காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்